மத்தியப்பிரதேச மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று மதியம் சுமார் 50 பயணிகளுடன் காண்ட்வா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து சிம்ரோலுக்கும் கோரல் கிராமத்துக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்களை மீட்டு இந்தூரில் உள்ள என்ஒய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.